திரு. தம்பையா வேலும்மயிலும்
(ஓய்வு பெற்ற இரசாயனவியல் ஆசிரியர், Nigeria, Canada, Karaveddy)
பிறப்பு: 28/07/1943
இறப்பு: 23/04/2020
யாழ் கரணவாய் மத்தியை பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பையா வேலும்மயிலும் அவர்கள்
23/04/20 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான தம்பையா, பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும் காலம் சென்றவர்களான சிவகுரு, தங்காமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலம் சென்ற ஜெயதேவி அவர்களின் அன்பு கணவரும், பிரியதர்சினி, ஜெயக்குமார், ஜெயதர்சினி, குகதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும், நவரத்தினம், காலஞ்சென்றவர்களான தவமணி, தங்கவேலு, கமலாதேவி, மற்றும் ராஜகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரரும், செந்தில்குமார், பிரதீபன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜஸ்மிதா, ஆதித், அகிலேஷ், கவின், இனியா, நேகன், யுகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
கிரியை: 24/04/2020 மு.ப. 10.00 , செம்பாடு, கரணவாய் மத்தி, கரவெட்டி
தகனம்: எள்ளங்குளம் இந்து மயானம்.
தொடர்புகளுக்கு,
மகன்: ஜெயக்குமார் - 0094758748081 - Sri Lanka



